தேவதையைக் கண்டேன்!

நீ தான் இவ்வுலகின் இராணி என்றேன்,
ஆட்சி செய்ய விருப்பமில்லை என்றாய்;
நான் தானே உன் உலகம் என்றேன்,
உலகம் எப்படி இராணியை ஆளும் என்று வினவி
பின் சிரிக்கலானாய் நீ;
அண்ட வெளியையும் ஆளும் இராணியையும் மறந்து
தேவதையைக் காணலானேன் நான்!