தேவதைக்காதல் - அத்தியாயம் இரண்டு

முந்தைய அத்தியாயம்

வாழ்வில் முதல் முறையாகப் பெண்ணைப் பெண்ணெனக் கண்ட காட்சி சிலாகித்தது, அவனை!

பெண்கள் அனைவரும் தேவதைகள் இலர்.. ஆனால் தேவதைகள் அனைவரும் பெண்கள் தானோ? இல்லை, தேவதைகளால் காதலிக்கப்படும் ஆண்களும் தேவதைகளே!

அவ்வகையில் அவனும் தேவதையாகப் போகிறான்!

"அன்பிலும் அழகிலும் பண்பிலும் பணிவிலும் சொல்லிலும் செயலிலும் இன்ன பிறவிலும் சிறந்தவள் எவளோ, அவளை அருளீர்" என்றான் முதல் வரத்தின் முற்று அங்கமாக..

"மற்ற மங்கைகளுடன் யான் இங்கனம் மறைய,
உன் தேவதையுடன் நீ இங்கு இனைய,
மற்ற இரு வரம் ஈவாள் அவளே" எனப் பொழிந்து, பின்  மறைந்தார் இறை!

அக்குறிஞ்சி மரங்கள் பொன்னென மின்ன,
தாமரைத் தேகமும்,
அங்கயற்கண்ணும்,
நரை தோய்த்த பலாச்சுளை உதடும்,
தங்க இடையும்,
நளின நடையும் கொண்டு, 
அவ்வனத்தில் வனப்புடன் நடந்து வந்தாள், 
அவனை நோக்கி, 
அவனை தேவதையாக்கிய தேவதை!

அடுத்த அத்தியாயம்